சோனமுத்தா போச்சா ... முகநூலில் மாட்டிக்கொண்ட மனைவி அதிர்ச்சியில் கணவர் !!!

முகநூலில் மாட்டிக்கொண்ட மனைவி வேறு ஒருவருடன் திருணம்

சோனமுத்தா போச்சா ... முகநூலில் மாட்டிக்கொண்ட மனைவி அதிர்ச்சியில் கணவர் !!!

சீனாவைச் சேர்ந்த ஒருவர் முகநூலில் தனது பொழுதை போக்கிக்கொண்டிருந்தார். அப்போது, ஜிக்சியாவோ டவுனில் நடைபெற்ற திருமண ஒன்றின் வீடியோவை முகநூலில் பார்த்துள்ளார். அந்த வீடியோவில் இருக்கும் மணப்பெண் தனது மனைவிபோல் இருப்பதால் அதிர்ச்சியடைந்தார். இதை தொடர்ந்து அவர் விசாரித்ததில் சீனாவைச் சேர்ந்த வேறொருநபருடன் தனது மனைவிக்கு  திருமணம் நடைபெற்றதை அறிந்து கொண்டார். 

சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியை சேர்ந்தவர் செங் சீனாவில் பெண்கள் குறைவு என்ற காரணத்தால் இவர் நீண்டநாள் திருமணம் ஆகாமால் இருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே திருமணமான நானா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதனை அவர்கள் பதிவு செய்யவில்லை. நானாவுக்கு வரதட்சணையாக இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதுபோக நகைகள், திருமணப் பரிசுகளும் வழங்கப்பட்டன. திருமணம் நடைபெற்ற சில நாட்களில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்ற நானா, அதன் பின்னர் திரும்பி வரவில்லை.  

இந்நிலையில், ஒரு நாள் முகநூலில் யின் செங் பொழுதை போக்கிக்கொண்டிருந்தார். அப்போது, ஜிக்சியாவோ டவுனில் நடைபெற்ற திருமணம் ஒன்றின் வீடியோவை முகநூலில் பார்த்துள்ளார். மணப்பெண் தனது மனைவிபோல் இருப்பதால் அதிர்ச்சியடைந்த செங் இது குறித்த விசாரணையில் இறங்கினார். ஜிக்சியா என்ற பகுதிக்கு சென்று விசாரித்தப்போது வீடியோவில் இருப்பது நானா தான் என்பது தெரியவந்தது.  

இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் நானா திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களை குறிவைத்து மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  இந்திய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய் வரை அவர்கள் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.