மகளின் காதலனை துண்டு துண்டாக வெட்டி நிலத்தில் புதைத்த தந்தை: ஆந்திராவை அலறவைத்த அதிர்ச்சி சம்பவம்...

மகளின் காதலனை துண்டு துண்டாக வெட்டி நிலத்தில் புதைத்த தந்தை: ஆந்திராவை அலறவைத்த அதிர்ச்சி சம்பவம்...

ஆந்திர மாநிலம் அமராவதியில்  மகளின் காதலனை அவரது தந்தை கொன்று அந்த உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போங்கராகுண்டா கிராமத்தைச் சேர்ந்த 23வயதான தனசேகர் வெளியூரில் வேலைபார்த்து வருகிறார்.தற்போது  கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் தனசேகரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைன் நடத்தி வந்தனர்.

அப்போழுது  தனசேகர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில் தனசேகரின் செல்போனை ஆய்வு செய்ததில் மே 22 ஆம் தேதி அந்த பெண்ணின் தந்தை பாபு, தனசேகரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து பாபுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

அதில் தனசேகரை கொலை செய்து தன்னுடைய வயலில் புதைத்துவிட்டதாக பாபு கூறியிருந்தார். தீவிர விசாரணையில் வழக்கமாக விவசாய நிலத்திற்கு காவலுக்கு செல்லும் பாபு சம்பவத்தன்று வீட்டுக்கு திரும்பினார். தனசேகர் அப்போது மகளின் அறையில் தனசேகர் இருந்ததை பார்த்தவுடன் பாபுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் தனசேகரை தாக்கியதால் அவர் உயிரிழந்துவிட்டார்.

 பின்னர் அவரது உடலை கிணற்றில் வீசியுள்ளார். ஆனால் மறுநாள் உடல் மேலே எழும்பினால் பிரச்சினையாகிவிடும் என அச்சமடைந்துள்ளார். துண்டு துண்டாக வெட்டிய பாபு இதனால் தனசேகரின் உடலை கிணற்றிலிருந்து எடுத்து கோடாரியால் துண்டு துண்டாக வெட்டி நிலத்தில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து பாபுவை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.