வேறொரு பெண்ணோடு தொடர்பு,.. இரண்டாவது மனைவியோடு குடித்தனம்,..தமிழன் பிரசன்னா குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்.! 

வேறொரு பெண்ணோடு தொடர்பு,.. இரண்டாவது மனைவியோடு குடித்தனம்,..தமிழன் பிரசன்னா குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்.! 

சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்குப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தமிழன் பிரசன்னா. இவர் திமுகவின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக பொறுப்பில் உள்ளார். இவருக்கு நதியா என்பவருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் நதியா வீட்டின் படுக்கையறை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதைக் கண்டு அதிரச்சியடைந்த அவரின் கணவரான தமிழன் பிரசன்னா நதியாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து அவரின் உடலை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் காவல் துறையினர் தற்கொலை செய்துகொண்ட நதியாவின் தந்தை ரவி என்பவரிடம் புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 

 
விசாரணைக்காக  தமிழன் பிரசன்னா கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில், இறந்துபோன நதியாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் தனது பிறந்தநாளை நண்பர்களை அழைத்து விமர்சையாக கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு இது கொரோனா காலம் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விமர்சையாக கொண்டாட முடியாது என அவரது கணவர் மறுத்துள்ளார்.

இதன்காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நதியா தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார் என்று காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறை விசாரணைக்காக நேற்று கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தமிழன் பிரசன்னா பிற்பகல் 3 மணி வரை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார்.  அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் அவரிடமிருந்து எந்த உபயோகமான தகவலும் கிடைக்கவில்லை என்றும்  பிரேதப் பரிசோதனை அறிக்கையை வைத்தும் அடுத்த கட்ட விசாரணைக்குப் பிறகுமே எதையும் சொல்ல முடியும் என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் தமிழன் பிரசன்னா மீது ஏற்கனவே சில பாலியல் புகார்கள் இணையத்தில் வந்தபோதே அவருக்கும் அவர் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது என்றும் தற்போது தமிழன் பிரசன்னா தனது இரண்டாவது மனைவியோடு வசித்து வருகிறார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் தமிழன் பிரசன்னா மனைவி நதியா தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது காவல்துறையின் இறுதி விசாரணைக்கு பிறகே தெரியவரும்.