தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டது ஏன்? காவல்துறை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்...

திமுக மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல் காவல்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.

தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டது ஏன்? காவல்துறை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்...

சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்குப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தமிழன் பிரசன்னா. இவர் திமுகவின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக பொறுப்பில் உள்ளார். இவருக்கு நதியா என்பவருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் நதியா வீட்டின் படுக்கையறை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 இதைக் கண்டு அதிரச்சியடைந்த அவரின் கணவரான தமிழன் பிரசன்னா நதியாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து அவரின் உடலை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் காவல் துறையினர் தற்கொலை செய்துகொண்ட நதியாவின் தந்தை ரவி என்பவரிடம் புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்காக  தமிழன் பிரசன்னா கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில், இறந்துபோன நதியாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு பிரசன்னா இது கொரோனா காலம் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விமர்சையாக கொண்டாட முடியாது என மறுத்துள்ளார்.

இதன்காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நதியா தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார் என்று காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக குடும்ப சண்டையும் நடந்துள்ளது என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.