உயிரைக்காக்கும் மருத்துவரை தாக்குவதா? கோவையில் பயங்கரம்

கோவை அருகே கொரோனா நோயாளி இறந்ததால், டாக்டரை உறவினர்கள் தாக்கினர். இது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உயிரைக்காக்கும் மருத்துவரை தாக்குவதா? கோவையில் பயங்கரம்
கோவை அருகே கொரோனா நோயாளி இறந்ததால், டாக்டரை உறவினர்கள் தாக்கினர். இது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
கோவை, விசுவாசபுரத்தை சேர்ந்தவர் விவேக், 31. இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, மே 30ம் தேதி கீரணத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த, 6ம் தேதி அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, டாக்டர்கள், மற்றொரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். விவேக்கை, கோவை இ.எஸ்.ஐ. , மருத்துவமனையில், உறவினர்கள் சேர்த்தனர். எனினிம் சிகிச்சை பலனின்றி விவேக் அன்று இரவே உயிரிழந்தார். 
 
இதையடுத்து உறவினர்கள், சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனைக்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டாக்டர் சாரநாத் என்பவரை சிலர் தாக்கினர். இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின் கோவில்பாளையம் போலீசார், ஜான் ஐசக் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.