சட்டப்பேரவை அலுவல் கூட்டம்: சபாநாயகர் அப்பாவு தகவல்

வரும் 21ஆம் தேதி ஆளுனர் உரைக்கு பின் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை அலுவல் கூட்டம்: சபாநாயகர் அப்பாவு தகவல்
வரும் 21ஆம் தேதி ஆளுனர் உரைக்கு பின் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார். ஆளுனரை சந்திக்க சென்ற முதலமைச்சருடன், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், மற்றும் உதவி அலுவலர்கள் சென்றனர். சட்டப்பேரவை கூட்டம் விரைவில் தொடங்க உள்ளதால், சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுனருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவே முதலமைச்சர் நேரில் சென்றதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை வரும் 21ஆம் தேதி ஆளுனர் உரையுடன் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுனர் உரையுடன் கூடுகிறது என்றும், அதன் பின் சட்டப்பேரவை அலுவல் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெறும், என்னென்ன பணிகள் என்பதை அதில் முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்ட சபாநாயகர்,  ஜனநாயக முறையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், அனைவரையும் அரவணைத்து செல்வதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்றும் கூறினார்.