தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது...

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ள நிலையில் உயிரிழப்பும் நீண்ட நாட்களுக்கு பிறகு 400 கீழ் சரிந்துள்ளது. 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை  சார்பில்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 19 ஆயிரத்து 448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ள சூழலில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரமாக குறைந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 351 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது..

கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 360 பேர் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 1530 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கோவையிலும் படிப்படியாக தொற்று பரவல் குறைந்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 564ஆக பதிவாகியுள்ளது.