பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய படை பாதுகாப்பு !!!

பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய படை பாதுகாப்பு !!!

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியவில் தற்போது கோவிஷீல்ட், கோவக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மூன்றாவது தடுப்பூசியாக ஸ்பூட்னிக் - வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் முக்கிய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவரான பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஐதராபாத் அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத் தலைவர் ஆதார் பூனவல்லாவிற்கு ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.